search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள் கைது"

    • போலீசார் ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
    • 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை மெரினா காமராஜர் சாலையில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ராகுல் மகரனா (வயது 18) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் விஜயவாடாவில் இருந்து ரெயில் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்து பின்னர் ஆட்டோ மூலம் கேளம்பாக்கத்தில் உள்ள பிரபல கஞ்சா வியாபாரி சிவாவிடம் ஒப்படைக்க வேண்டி ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.

    • வேளச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் ஆபாச அழைப்புகள் மூலம் வாலிபர்கள் வளைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
    • வேளச்சேரி தேவி கருமாரியம்மன் நகரில் உள்ள வீட்டில் விபசார தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னையில் பாலியல் தொழிலை கட்டுப்படுத்த விபசார தடுப்புப் பிரிவு போலீசார் தொடர்ந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் வெளிமாநிலங்களில் இருந்து படையெடுக்கும் அழகிகள் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்தோ அல்லது விடுதிகளில் தங்கி இருந்தோ பாலியல் தொழிலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் அவ்வப்போது வெளிமாநில அழகிகளை விபசார தடுப்புப் பிரிவு போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து காப்பகத்துக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் ஆபாச அழைப்புகள் மூலம் வாலிபர்கள் வளைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து வேளச்சேரி தேவி கருமாரியம்மன் நகரில் உள்ள வீட்டில் விபசார தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி மற்றும் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு 2 இளம்பெண்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துணை நடிகைகள் என்பது தெரியவந்தது. இருவரையும் மீட்ட போலீசார் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பது பற்றி விசாரித்தனர். அப்போது தினேஷ் என்ற வாலிபர் துணை நடிகைகள் மற்றும் அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    அவரை தேடியபோது தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். தரகர்களாக செயல்பட்ட 2 பேர் சிக்கினர். அவர்களில் ஒருவரது பெயர் சுமியோன் ஜார்ஜ், நெல்லையை சேர்ந்தவர். இன்னொருவர் காளிதாஸ் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஆவார்.

    இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர துணை நடிகைகளை போன்று வேறு அழகிகள் யாரையும் இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • வ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ் குமார், ஆகாஷ் என்கிற குள்ள பெட்டா, சந்தோஷ் ஆகிய 3 பேரை புது வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
    • சேணி அம்மன் கோவில் தெருவில் வழிப்பறியில் ஈடுபட்டு துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராயபுரம்:

    புதுவ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ் குமார், ஆகாஷ் என்கிற குள்ள பெட்டா, சந்தோஷ் ஆகிய 3 பேரை புது வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    வண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள அம்மணி அம்மன் தெருவில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறித்து தப்பிச் சென்றனர்.

    இதுதொடர்பாக அதே பகுதி வ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ் குமார், ஆகாஷ் என்கிற குள்ள பெட்டா, சந்தோஷ் ஆகிய 3 பேரை புது வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் சேணி அம்மன் கோவில் தெருவில் வழிப்பறியில் ஈடுபட்டு துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த நரேஷ், லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    • சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 3 வட மாநில வாலிபர்களை போலீசார் பிடித்து உள்ளனர்.
    • சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பில்லா குப்பம் பகுதியை சேர்ந்த 55 வயது பெண் கணவர் மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை அந்த பெண் தனக்கு சொந்தமான ஆடுகளை பில்லா குப்பம் பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் பின்புறம் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு யாரும் இல்லை. இதனை நோட்டமிட்டு வட மாநில வாலிபர்கள் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை மிரட்டினர். பின்னர் அவரை குண்டு கட்டாக தூக்கி கடத்தி சென்றனர்.

    பின்னர் அங்குள்ள மறைவான பகுதியில் பெண்ணை கற்பழித்துவிட்டு மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அலறி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வடமாநில வாலிபர்கள் 3 பேர் தன்னை கடத்தி சென்று கற்பழித்ததாக அந்த பெண் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அதே பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 3 வட மாநில வாலிபர்களை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் புகார் கூறிய பெண்ணுக்கு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    கற்பழிப்பு தொடர்பாக நேற்று இரவே புகார் செய்தும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதனை கண்டித்து அப்பகுதி மக்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த போலீசாரிடமும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் பணம்பூர் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • மங்களூர் மாநகர போலீசார் 900 கிராம் எடை கொண்ட ரூ.90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்தனர்.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் பணம்பூர் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் திமிங்கல உமிழ்நீர் என்று அழைக்கப்படும் அம்பர்கிரிசை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

    அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் உடுப்பி மாவட்டம் சாலிகிராமத்தை சேர்ந்த ஜெயகரா (39), சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவை சேர்ந்த ஆதித்யா (25) மற்றும் ஹாவேரி மாவட்டம் சிகான் பகுதியை சேர்ந்த லோகித் குமார் என்று தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து மங்களூர் மாநகர போலீசார் 900 கிராம் எடை கொண்ட ரூ.90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    • காரை போலீசார் சுற்றி வளைத்து காரில் இருந்த 2 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
    • காஞ்சிபுரம் ரவுடி தலையை துண்டாக வெட்டி கொலை செய்து வீசி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட்டில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது வெள்ளை நிற ஹோண்டா கார் வந்தது. இந்த காரை போலீசார் சுற்றி வளைத்து காரில் இருந்த 2 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் குமரன் (வயது 21), விக்னேஷ் (23) என்பதும், இவர்கள் காஞ்சிபுரம் ரவுடி தலையை துண்டாக வெட்டி கொலை செய்து வீசி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து கார் மற்றும் காரில் இருந்த கத்தி, ஹெல்மெட் போன்றவைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களிடம் 2 வாலிபர்களையும் விக்கிரவாண்டி போலீசார் ஒப்படைத்தனர்.

    • கண்ணூர் ரெயில் நிலையம் வரை பெண்ணுக்கு 3 பேரும் தொடர்ந்து தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளனர்.
    • நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலிசாரிடம் பெண் பயணி புகார் தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    நாகர்கோவிலில் இருந்து மங்களூருவுக்கு ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 2.15 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

    அதிகாலை இயக்கப்பட்ட போதிலும் இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் பயணிக்கிறார்கள். இந்த ரெயிலின் பொதுப்பெட்டியில் நேற்று இளம்பெண் ஒருவர் பயணித்தார்.

    அந்த பெண் பயணித்த பொதுப்பெட்டியில் பயாஸ்(26), முகம்மது ஷபி(36), அப்துல் வாஹித் (35) ஆகியோரும் பயணித்துள்ளனர். குடிபோதையில் இருந்த அவர்கள், அந்த பெண் பயணியிடம் தவறாக நடந்துள்ளனர்.

    கண்ணூர் ரெயில் நிலையம் வரை அந்த பெண்ணுக்கு அவர்கள் 3 பேரும் தொடர்ந்து தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளனர். அவர் கண்டித்தும் வாலிபர்கள் 3 பேரும் தொடர்ந்து அத்துமீறியபடி இருந்துள்ளனர்.

    இதனால் அந்த பெண் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதையடுத்து ரெயில் நடுவழியில் நின்றது. டிக்கெட் பரிசோதகர் பொதுப்பெட்டிக்கு வந்து அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது யார்? என்று விசாரித்தார்.

    அப்போது அந்த பெண், வாலிபர்கள் 3 பேரும் தன்னிடம் தவறாக நடந்ததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து 3 வாலிபர்களையும் சக பயணிகள் பிடித்து ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலிசாரிடம் அந்த பெண் பயணி புகார் தெரிவித்தார். அதன்பேரில் 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    • போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சடையம் பாளையம் பிரிவு, முத்தம்பாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த முத்து மகன் சரத்குமார் (வயது 27), ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தை சேர்ந்த அழகு துரை மகன் பிரசாந்த் (30) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1,300 மதிப்புள்ள ஹான்ஸ், கூலி போன்ற போதை பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை மளிகை கடையில் பணம் திருடியதும், மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
    • பெருந்துறை போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (55). இவர் விஜயமங்கலம்- ஊத்துக்குளி ரோடு சந்திப்பு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு சென்று மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.12 ஆயிரம் திருடப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பூர் மாவட்டம் கள்ளன்காடு வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (25). தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    அருண் சம்பவத்தன்று பெருந்துறையில் நடன பயிற்சி மையம் நடத்தி வரும் தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இரவு நண்பருடன் நடன பயிற்சி மையத்தில் தங்கி உள்ளார். மோட்டார் சைக்கிளை பயிற்சி மையத்தின் வெளியே நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.

    பின்னர் காலை எழுந்து வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அருண் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் காஞ்சிகோவில் பிரிவில் பெருந்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிள் எண்ணை பார்த்த போது அது தொலைந்து போன அருணின் மோட்டார் சைக்கிள் எண் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (34), கோவிந்தராஜ் (22), பூபதி (20) ஆகியோர் என்பதும், பெருந்துறை மளிகை கடையில் பணம் திருடியதும், மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.

    இதனையடுத்து பெருந்துறை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கேரளாவிற்கு ஏலத்தோட்ட தொழிலா ளர்களை ஜீப்பில் அழை த்துச் செல்லும் வேலை பார்த்து வருகிறார்.
    • சம்பவத்தன்று தனது வாகனத்தில் ஆட்களை இறக்கிவிட்டு கம்பம் மெட்டு மலைச்சாலையில் வந்தபோது கேரளா மாநிலம் நெடுங்கண்டத்தை சேர்ந்த 4 பேர் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வாக னத்தை பின் தொடர்ந்து வந்தனர்.

    கம்பம்:

    கம்பம் அருகில் உள்ள காமயக்கவுண்டன் பட்டி யை சேர்ந்தவர் ஜெயராஜ் (54). இவர் கேரளாவிற்கு ஏலத்தோட்ட தொழிலா ளர்களை ஜீப்பில் அழை த்துச் செல்லும் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது வாகனத்தில் ஆட்களை இறக்கிவிட்டு கம்பம் மெட்டு மலைச்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது கேரளா மாநிலம் நெடுங்கண்டத்தை சேர்ந்த பிரபு (29), ஜெயபால் (29), ெஜயபாண்டி (22), மகேஷ் (24) ஆகிய 4 ேபரும் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வாக னத்தை பின் தொடர்ந்து வந்தனர்.

    அவர்கள் ஜெயராஜின் வாகனத்தை இடிக்கும் வகையில் ஆபத்தான முறையில் பயணித்ததால் இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் வாலிபர் மாயம் என வழக்குப்பதிவு செய்து, மாயமான அருண் கார்த்திக்கை தேடி வந்தனர்.
    • கொன்று புதைத்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் அருண்கார்த்திக் (வயது25). டிரைவர்.

    அருண்கார்த்திக் கடந்த 10-ந் தேதி வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    அவரது தந்தை மகனை அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தார். ஆனாலும் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

    அவரது நண்பர்களிடம் விசாரித்த போதும், அவர்களும் நாங்கள் பார்க்கவில்லை என்றே கூறியுள்ளனர். இதையடுத்து கணேசன் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் வாலிபர் மாயம் என வழக்குப்பதிவு செய்து, மாயமான அருண் கார்த்திக்கை தேடி வந்தனர்.

    மேலும் பல்வேறு கோணங்களில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அருண்கார்த்திக்கின் நண்பர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது போலீசாருக்கு எஸ்.சந்திராபுரத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் (26), அரவிந்த் என்ற அருண்ராஜ் (25) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    அவர்களை பிடித்து விசாரித்த போது முதலில் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்து வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அருண்கார்த்திக்கை அடித்து கொன்று, உடலை கல்குவாரி அருகே புதைத்து விட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் எஸ்.சந்திராபுரத்தில் உள்ள கல்குவாரி அருகே அழைத்து சென்றனர். அவர்கள் அங்கு அருண்கார்த்திக்கை கொன்று குப்பை, மணல் போட்டு புதைத்த இடத்தை காண்பித்தனர்.

    சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. ஏ.எஸ்.பி. பிருந்தா, தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். அங்கு அதிகளவிலான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

    அவர்கள் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    அருண்கார்த்திக் எங்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு தான் அறிமுகமானார். நாங்கள் 3 பேரும் எப்போதும் ஒன்றாக மது குடிப்பதையும், சூதாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தோம்.

    தொடர்ந்து ஒன்றாக சந்தித்து கொண்டதால் நாங்கள் 3 பேரும் நண்பர்களாக மாறிவிட்டோம். எங்கு சென்றாலும் 3 பேரும் ஒன்றாக தான் செல்வோம்.

    அருண் கார்த்திக், எங்கள் 2 பேரிடம் பணம் கேட்டார். நாங்களும் நண்பர் என்பதால் எங்களிடம் இருந்த பணத்தை கொடுத்தோம். ஆனால் பணம் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி தரவில்லை.

    இது தொடர்பாக அவரிடம் கேட்டபோதெல்லாம் மழுப்பலான பதில்களையே கூறி வந்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனை தொடர்ந்து அவர் எங்களுடன் சேருவதை நிறுத்திவிட்டார். சம்பவத்தன்று நாங்கள் அருண்கார்த்திக்கு போன் செய்து, பணம் சம்பந்தமாக நாம் சமாதானமாக சென்று விடலாம்.

    முன்பு போல நாம் நண்பர்களாக இருப்போம் என கூறி சமாதானம் பேசுவதற்கு அழைத்தோம். அவரும் வந்தார். பின்னர் 3 பேரும் எஸ்.சந்திராபுரத்தில் பாறைமேடு பகுதிக்கு சென்று மது அருந்தினோம்.

    அப்போது எங்களுக்குள் மீண்டும் பணம் தொடர்பாக தகராறு எழுந்தது.

    இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அங்கிருந்த கட்டையை எடுத்து அருண்கார்த்திக்கை தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

    அவர் இறந்துவிட்டதால் எங்களுக்கு பதற்றம் ஏற்பட்டது. உடனே அவரது உடலை மறைத்து விட முடிவு செய்தோம். அதன்படி அங்கு குழி தோண்டி உடலை உள்ளே தூக்கி போட்டு, மணல் மற்றும் அங்கு கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து போட்டு மூடி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டோம்.

    அருண்கார்த்திக்கின் தந்தை எங்களிடம் வந்து கேட்டபோது, நாங்கள் அவரை பார்க்கவில்லை என்று தெரிவித்ததோடு, அவருடன் இணைந்து தேடுவது போலவும் நாடகமாடினோம்.

    ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்கள் 2 பேரையும் கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே கொன்று புதைக்கப்பட்ட அருண்கார்த்திக்கின் உடல் போலீசார் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடல் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபரை நண்பர்களே அடித்து கொன்று புதைத்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசாரின் ரோந்து பைக்கை உடைத்ததால் பரபரப்பு
    • மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் புத்தர் நகரில் ஆடி 4-ம் வெள் ளிக்கிழமையான நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் திருவிழா நடை பெற்றது.

    இதனையொட்டி நெல்லூர்பேட்டை ஏரிக் கரை பகுதியில் இருந்து பேரணாம்பட்டு சாலை வழியாக மேளதாளத்துடன் பூங்கரகம் ஊர்வலமாக சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது புத்தர் நகர் பகுதியை சேர்ந்த மனோஜ்(வயது 20), மகாவி(29) ஆகியோர் பட்டாசுகளை கொளுத்தி பக்தர்கள் மீது வீசி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பூங்கரக ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பட்டாசு வீசியவர்களை தடுத்தனர். ஆனால் அவர்கள் போலீசாரை மிரட்டிய தோடு, அங்கு நிறுத்தியிருந்த போலீசின் ரோந்து பைக்கை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ், மகாவி ஆகியோரை கைது செய்தனர்.

    ×